Home »
» செல்பி மோகத்தால் நீரில் முழ்கி உயிரிழந்த இளைஞர்! September 15, 2018
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் செல்பி மோகத்தில், நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலை சேர்ந்த உதயகுமார், நண்பர்களுடன் பாபநாசம் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் செல்பி எடுக்கும்போது, தவறி ஆற்றில் விழுந்த செல்போனை எடுக்க உதயகுமார் முயன்றுள்ளார். நீரில் முழ்கி தேடும்போது உதயகுமார், எதிர்பாரவிதமாக பாறைகளின் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் நீண்டநேரம் தேடி சடலத்தை மீட்டனர். இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உதயகுமாரின் உடலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Posts:
நீட் தற்கொலைகள் - தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்த தற்கொலைகளை அரசு ஊக்குவிப்பது போல உள்ளதாக சென்… Read More
6 முன்னாள் நீதிபதிகள்.. 25 வழக்கறிஞர்கள்.. நீதியரசர்கள் ஒன்று சேர்ந்து சூர்யாவுக்காக கொடுத்த குரல் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமைசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 6 முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரச… Read More
3 பிரதமர்கள், 2 முதல்வர்கள், 350 எம்பிகள்… அரசியல் நகர்வுகளை வேவு பார்க்கும் சீனா! சீன அரசாங்கத்துடனும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்புகளைக் கொண்ட ஷென்சென் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய வெளிநாட்டு முக்கிய தகவல் த… Read More
நீட் கெடுபிடிகளால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளான மாணவர்கள்! நீட் கெடுபிடிகளால், தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த மாணவி, 2 ஆண்ட… Read More
தமிழகத்தில் 5 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது.… Read More