ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஆந்திர எம்.எல்.ஏ மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொலை! September 23, 2018

Image

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில், அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வரா, அதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சிவேரி ஆகியோர் தும்ரிகுலா வனப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் விசாகப்பட்டினம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மாவோயிஸ்ட்களை தேடி வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சர்வேஸ்வரராவ், அண்மையில் தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.