சனி, 29 செப்டம்பர், 2018

கைது வாரண்ட் இருந்தும் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல் விட்டது, நிர்வாக சீரழிவுக்கு எடுத்துகாட்டு - நல்லக்கண்ணு September 29, 2018

Image

கைது வாரண்ட் இருந்தும் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல் விட்டது, நிர்வாக சீரழிவுக்கு எடுத்துகாட்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம், பாலின வேறுபாடு களையப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் நடவடிக்கையில்லை என்றும், அவர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் நீடிப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

கொள்கைகளை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும், நீதிமன்றத்தை கீழ்தரமாக பேசியவர் சுதந்திரமாக உள்ளதாகவும் நல்லக்கண்ணு கூறினார்.