புதன், 26 செப்டம்பர், 2018

கத்தார் நாட்டிற்கு Free visa( விசிட் விசா ) வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!

கத்தார் நாட்டிற்கு Free visa( விசிட் விசா ) வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கத்தாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
Qatar Free Visa என்பது இதுதான்.
அந்த வீசாவில் மூன்றுமாதம் கத்தாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
கத்தாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
கத்தார் தொழில் சந்தையில் கடுமையான ஒரு போட்டி இருக்கிறது. அதற்கு முகம் கொடுக்க இந்தியாவில் இருந்து வரும் போதே ஆங்கில மொழியில் சமாளிக்கவும் கம்யூட்டரை சகஜமாக கையாளவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தது இங்கே வருவதற்கு முன்னறே நீங்கள் உங்கள் துறயை தெளிவாக தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
அந்தத் துறயைில் குறைந்தது இரண்டு, மூன்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதல்களேனும் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் எந்த வேலையானாலும் சரி என்று சொல்லிக் கொண்டு, மீலாத் விழாவிலும், இல்ல விளையாட்டு போட்டியிலும் கிடைத்த சான்றிதல்களை வைத்துக் கொண்டு இங்கே வேலை தேடமுடியாது.
இந்தியாவின் அதிகமான இளைஞர்கள் நாட்டின் எல்லா தொழில் முயற்சியையும் செய்ததன் பின்னரே வெளிநாடு செல்ல தீர்மாணிக்கிறார்கள்.
இங்கே வரும் எல்லோருமே ஆயிரம் கனவுகளுடனும், கடன்களுடனும், கஷ்டங்களுடனுமே வந்து சேர்கிறார்கள் கத்தாரை பொருத்தவரை தமிழகத்தின் எல்லா ஊரிலும் ஒரு சங்கம் அமைக்கும் அளவிற்கு ஆள் இருக்கிறது. எனவே Free Visa வீசாவில் யார் கடார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள், உறவினர்கள் யாராவது இருப்பார்கள்.
பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடனும் ஆயிரம் எதிர்காலக் கனவுகளுடனும் வரும் நம் இளைஞர்கள் வேலை தேடுவதற்குப் பதிலாக நன்றாக தூங்கிக் கொண்டும், முழுநேரம் ஃபேஸ்புக்கிள் தொங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இங்கே வரும்போது எல்லோரும் வேலைதேட வேண்டும் என்ற வேட்கையோடுதான் வருகிறார்கள்.
ஆனால் ஏசி அறை,நேரத்துக்கு உணவு, முழு நேர இன்டநெட் இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்ததும் வீட்டையும், வீட்டுப் பிரச்சினைகளையும் மறந்துவிடுகிறார்கள்.
இங்கே முழுமூச்சோடு இறங்கி பாடுபட்டால் மட்டுமே ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு நல்ல ஊதியத்துக்கு ஒரு வேலை தேடிக் கொள்ள முடியும்.
பத்திரகைகளில் வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எறி இறங்கி பயோடேட்டாவை கொடுக்க வேண்டும்.
நண்பர்கள் உறவினர்கள் வேளை செய்யும் நிறுவனங்களில் இருக்கும் வேகென்சிகள் குறித்தும் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேணடும்.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்களில் இருக்கும் வேலை வாய்ப்புகளைத் தேடி விண்ணப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் நல்லா திண்டு போட்டு படுத்தா வீசா முடியும் திகதி வரும் வரை அவருக்கு தெரியாமல் இருக்கும். அதன் பினனர் அவருக்கு இரண்டு ஒப்ஷன்தான் இருக்கும். ஒன்று நாட்டுக்கு போகனும் .
அல்லது வீசா காலத்தை நீடிப்பதற்காக வேண்டி ஒரு பஞ்ச சம்பளத்துக்கு கிடைக்கும் ஏதாவது ஒரு வேளையில் சேர்ந்து கொள்ள வேண்டும். எனவே பெற்றோரின் ஆயிரம் கனவு களோடும், கண்ணீரோடும்,கடல்கடந்து தொழில் தேடிவரும் நம் இளைஞர்கள் மிகப் புத்திசாளித்தனமாகவும், விணைத் திரனோடும் செயற்பட வேண்டும்.
அப்போது மட்டும்தான் பல தியாகத்துடனும் கனவுகளுடனும் வந்த வெளிநாட்டு வாழ்கையின் உண்மையான நோக்கத்தை அடைந்து கொண்டு சந்தோஷமாக நாட்டுக்கு செல்ல முடியும்.
Source: Kilakarai Classified