சனி, 15 செப்டம்பர், 2018

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - திருநெல்வேலி ஆட்சியர் எச்சரிக்கை September 15, 2018

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, கட்டுப்பாட்டை மீறி கலவரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார். 

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை தொடக்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார். செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.