
ஹிமாச்சலப்பிரதேசம் மணாலியில் வெள்ள பாதித்த பகுதியில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்களை வழங்கினர்.
மணாலியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மீட்பு பணியினர் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால், அங்கு, ஹெலிகாப்டர் உதவியுடன், குடிநீர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மீட்பு படையினர் வழங்கினர்.