Home »
» திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக எம்.பி.க்கள், மத்திய அரசின் ஏவலர்களாக செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார்.தமிழகத்திற்கு நல்ல அரசு அமைய வேண்டும் அதற்கு ஆட்சி மாற்றம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Posts:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று குவியலாக கிடந்த ஆதார் மற்றும் பான் கார்டுகள்! சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதி வாசல் அருகே, குவியல் குவியலாக கிடந்த பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகளால், சென்னை விமான நிலையத்… Read More
ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆராய 8 பேர் கொண்ட குழு அமைப்பு 2 9 23"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு; அமித் ஷா, ஆதிர், ஆசா… Read More
தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலம், நிதியில் அறநிலையத் துறை கட்டிடங்கள்: நீதிமன்றத்தில் ஒப்புதல் சென்னை ஐகோர்ட்இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதன் பிராந்திய இணை ஆணையர்க… Read More
சனாதன மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்: உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்பது கொசு, மலேரியா, ப்ளூ, டெங்கு போன்றது. அதை அழிக்க வேண்… Read More
ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் சந்திக்கலாம் என்பதற்காக ‘ஒரே நாடு ஒரே தேர்தல் 2 9 23வரிசையாக தோல்விகளைச் சந்தித்து வருவதால் தொடர்ந்து மனக் கஷ்டமாக இருக்கும். எனவே ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் சந்திக்கலாம் என்பதற்காக ‘… Read More