சனி, 15 செப்டம்பர், 2018

ஈரோட்டில் மதிமுக மாநில மாநாடு தொடங்கியது! September 15, 2018

Image

மதிமுகவின் மாநில மாநாடு ஈரோடு மூலக்கடையில் இன்று காலை தொடங்கியது. 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா, மதிமுகவின் வெள்ளி விழா, பொது வாழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அடியெடுத்து வைத்ததன் பொன் விழா ஆகிய முப்பெரும் விழாக்களையும் இணைத்து மதிமுகவின் மாநில மாநாடாக ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள மூலக்கடையில் நடைபெறுகிறது.

முன்னதாக மாநாட்டு திடலில் கட்சிக்கொடியை வைகோ ஏற்றினார். தொடர்ந்து, மாநாட்டு அரங்கை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி திறந்து வைத்தார். இதேபோல் மதிமுகவின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, வைகோ பார்வையிட்டார்.

மதிமுக அவைத்தலைவரான திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.