வியாழன், 27 செப்டம்பர், 2018

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? September 27, 2018

அயோத்தி விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்களை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.  மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள பகுதி சன்னி வகுப்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 3 தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதுகுறித்த விசாரணை  நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிகள் அத்தியாவசியமில்லை என உச்சநீதிமன்றம் கடந்த 1994ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்க உள்ளது. 

Image