செவ்வாய், 25 செப்டம்பர், 2018

பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவு! September 25, 2018

Image

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளருக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகே பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2016ம் ஆண்டு போராட்டம் நடத்திய பியூஷ் மானுஷை போலீசார் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது பியூஷ் மானுஷை சிறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. தம்மை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, அக்டோபர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.