வெள்ளி, 28 செப்டம்பர், 2018

திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! September 27, 2018

Image

திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 497 சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர். தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என்றாலும், குடும்ப வாழ்க்கையை பாதிப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். 

பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், கணவன்-மனைவி இடையே விவாகரத்து ஏற்பட தகாத உறவும் காரணமாக இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். எந்த குற்றமும் இழைக்காமல் தகாத உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்றும், பெண்களுக்கு சம உரிமை வழங்காத எந்த சட்டமும் அரசியலமைப்புக்கு எதிரானதுதான் என்றும் தனது தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டார்.