செவ்வாய், 25 செப்டம்பர், 2018

ஐந்தே நாள்; எட்டரை லட்சம் கோடி இழப்பு. கதிகலங்கும் முதலீட்டாளர்கள்! September 25, 2018

Image
இந்தியப் பங்குச் சந்தைகளில் ஐந்தே நாளில், முதலீட்டாளர்களுக்கு எட்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், கடந்த வாரம் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 

இந்நிலையில், இன்று பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து, 36,305 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி, 175 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 10,967 புள்ளிகளில் முடிவடைந்தது. அன்னிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், ரூபாய் மதிப்பு சரிவு போன்றவையே, இந்த தொடர் சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும், இந்தியப் பங்குச்சந்தைகளில், முதலீட்டாளர்களுக்கு சுமார் எட்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் சுனாமி என்றே பொருளாதார வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.