புதன், 26 செப்டம்பர், 2018

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! September 26, 2018

Image

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்செங்கோடு பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு நேற்று மாலை சென்ற ராணி என்ற பெண்ணிடம் ஹெல்மட் அணிந்த மர்ம நபர்கள் 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர். அதே மர்ம நபர்கள், வாலரைகேட் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவரிடம் 8 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். மேலும், பனங்காடு என்ற பகுதியில் பால் விற்கச் சென்ற சித்தானந்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துபிரியா என்பவரிடம் 9 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். 

அடுத்தடுத்து 3 இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 15 சவரன் மதிப்புள்ள நகைகளை பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.