ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் பிரசாந்த் கிஷோர்! September 16, 2018

பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு தேர்தல் பிரச்சார உத்திகளை வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். 

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 2012-ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடிக்க பணியாற்றினார்.

தனிநபர்களுக்காக பணியாற்றிய தாம், தேர்தல் அரசியலுக்கு தயாராக உள்ளதாக அண்மையில் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்த நிலையில், தற்போது நிதிஷ்குமாருடன் இணைந்து நேரடி அரசியலில் குதித்துள்ளார்.