வியாழன், 20 செப்டம்பர், 2018

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தி வைப்பு! September 20, 2018

Image

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 600 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல்மின் நிலையங்கள் உள்ளன.  இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 440 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் போதிய நிலக்கரி இன்மையால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

ஏற்கனவே நான்கு யூனிட் கொண்ட 840 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் 2 மற்றும் 3 வது யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதானால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது