புதன்கிழமை அன்று, குஜராத் வனத்துறை மாநிலத்தில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை அறிவித்தது. மொத்தம் 674 ஆசிய சிங்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது. முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இம்முறை கணக்கெடுப்பு செய்யப்பட்டு சிங்கங்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் ‘பூனம் அவ்லோகன்’ எனப்படும் “கண்காணிப்பு” வழிமுறையில் இருந்து எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிங்கங்களின் கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்களின் கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் 5-6 தேதிகளில் கணக்கெடுப்பு நடைபெறவிருந்தது, ஆனால் மார்ச் 24 அன்று லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. 1,500 க்கும் மேற்பட்ட வன காவலர்கள், வன அதிகாரிகள் லாக் டவுன் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிங்கங்களின் கணக்கெடுப்பு பணியில் சேருமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வல்லுநர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை வனத்துறைஅழைத்தது, ஆனால் இந்த முறை, வனத்துறை அமைச்சர் கணபத் வாசவா, பலரையும் காட்டிற்குள் அனுப்புவது நல்லதல்ல என்று கூறினார். ஏனெனில், நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் மனிதனிடமிருந்து ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் பரவிய நிகழ்வை அவர் சுட்டிக் காட்டினார்.
அப்படியெனில், சிங்கங்களின் எண்ணிக்கை எவ்வாறு மதிப்பிடப்பட்டன?
பூனம் அவ்லோகன் மூலமாகும். இது ஒவ்வொரு பவுர்ணமியிலும் மேற்கொள்ளப்படும் மாதாந்திர உள்-பயிற்சி ஆகும். கள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்தந்த அதிகார வரம்புகளில் சிங்கங்களின் எண்ணிக்கையையும் அவற்றின் இருப்பிடங்களையும் மதிப்பிடுவதற்கு 24 மணி நேரம் செலவிடுகிறார்கள். இது 2015 சிங்கம் கணக்கெடுப்புக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக 2014 இல் வனத்துறையால் உருவாக்கப்பட்ட ஒருநெறிமுறையாகும்.
இந்த முறை, வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இது சமீபத்திய ஆண்டுகளில் சிங்க இயக்கங்கள் பதிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களையும், 13 வனப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. இந்த அனைத்து பிரிவுகளும், சுரேந்திரநகர் மற்றும் மோர்பி தவிர, 2015ல் எடுக்கப்பட்ட சிங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த ‘அவதானிப்பு’ வழக்கமான சிங்கங்களின் கணக்கெடுப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
சிங்கங்கள் கணக்கெடுப்பில் நிறைய பேரின் பங்களிப்பு தேவைப்படுகிறது. 2015 சென்சஸ் கணக்கெடுப்பில் சுமார் 2,000 அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இது சிங்கங்களின் கணக்கெடுப்பை இன்னும் வெளிப்படையானதாக ஆக்குகிறது. இந்த மாதத்தில் சிங்கம் ‘கண்காணிப்பு’ சுமார் 1,400 வன ஊழியர்கள் மற்றும் ஒரு சில நிபுணர்களால் நடத்தப்பட்டது.
சிங்கங்களின் கணக்கெடுப்பு வழக்கமாக இரண்டு நாட்களுக்கு மேல் நடக்கிறது, இதில் ஆரம்ப கணக்கெடுப்பு மற்றும் இறுதி கணக்கெடுப்பு ஆகியவை அடங்கும். இது தொகுதி எண்ணும் முறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது – வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும், நீர் நிலைகள் நிறுவப்பட்டு, மூலம் அந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள சிங்கங்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிடுகின்றனர். கோடைக்காலத்தில், 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வரும் சிங்கங்களை நேரடியாகப் பார்ப்பதன் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
சிங்கங்களை கண்காணித்தல் என்பது உள்-பயிற்சியாகும், இது வன ஊழியர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. நீர்நிலைகளில் நிலைத்திருப்பதற்குப் பதிலாக, அணிகளாக பிரிந்து அந்தந்த பிரதேசங்களில் தொடர்ந்து நகர்ந்து, சிங்கம் கண்காணிப்பாளர்களால் வழங்கப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் மற்றும் சிங்கங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் காட்சிகளின் அடிப்படையில் தங்கள் மதிப்பீடுகளைச் செய்வதால், இந்த முறையும் வேறுபட்டது.
இந்தியா-சீனா எல்லை பதற்றம்: தௌலத் பேக் ஓல்டி நெடுச்சாலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
சிங்கங்களின் கணக்கெடுப்பு இதற்கு முன் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா?
முதன் முதலாக சிங்கங்களின் கணக்கெடுப்பு 1936 இல் Nawab of Junagadh-ஆல் நடத்தப்பட்டது. 1965 முதல், வனத்துறை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தொடர்ந்து சிங்கங்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. 6, 8 மற்றும் 11 வது கணக்கெடுப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு காரணங்களுக்காக ஒரு வருடம் தாமதப்படுத்தப்பட்டன.
2020 எண்ணிக்கை குறிப்பாக முக்கியமானது. 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு 523 சிங்கங்கள் இருப்பதாக தெரிவித்தது. இது 2010 இல் 411 ஆக இருந்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு அம்ரேலியில் ஏற்பட்ட ஒரு வெள்ளத்தில் 12 சிங்கங்கள் கொல்லப்பட்டன, அதன்பிறகு இரண்டு டஜன் சிங்கங்கள் இறந்தன. 2018 இல் பேப்சியோசிஸ் ஏற்பட்டது, இதனால், கோடையில் மேலும் இரண்டு டஜன் சிங்கங்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.