திங்கள், 7 மே, 2018

தமிழக மாணவர்கள் சுமார் 5000 பேர் நீட் தேர்வு எழுதவில்லை என தகவல்! May 7, 2018

Image
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களில், சுமார் 5000 பேர் தேர்வெழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 430 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், சுமார் 5,000 பேர் தேர்வெழுத வரவில்லை என சி.பி.எஸ்.இ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், தேர்வெழுத விருப்பமின்றி தவிர்த்தவர்களும் இருப்பார்கள் என்றாலும், தொலை தூர தேர்வு மையங்கள், கடைசி நேர பயணம், தேர்வு மையம் அமைந்திருக்கும் நகரத்தில் உறவினர்கள் இல்லாமை, போன்ற காரணங்களால் தேர்வெழுத விரும்பியும், எழுத முடியாமல் பாதிப்புக்கு உள்ளானவர்களே கணிசமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.