Home »
» தமிழக அரசின் நீட் பயிற்சிகான தகுதித்தேர்வு தேதி வெளியானது..! August 03, 2019
credit ns7.tv
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு வரும் 7-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் மற்றும் JEE போட்டித்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட உள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகள் வரும் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என்றும், தேர்வுக்கான வினா மற்றும் விடைக்குறிப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தகுதித்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் வரும் 12-ம் தேதிக்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தகுதித் தேர்வைத் தொடர்ந்து, வரும் 9-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019 - 2020-ம் கல்வியாண்டில் அதிக மாணவர்களை நீட் மற்றும் JEE போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கில், இந்த தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
Related Posts:
பாரம்பரிய மரங்களை வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் - நடிகர் மன்சூர் அலிகான் September 6, 2018
பாரம்பரிய மரங்களை வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் இருநாபட்டு ஏரியில், … Read More
தெலங்கானா அரசைக் கலைக்க சந்திரசேகர ராவ் முடிவு! September 6, 2018
தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைப்பது தொடர்பாக அமைச்சரவை பரிந்துரையை அம்மாநில ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக் கொண்டுள்ளார். தெலுங்கானா சட்டசபையை கலைக்க… Read More
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறதா மத்திய அரசு? September 7, 2018
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் க… Read More
இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி டிராக்டர் விரைவில் அறிமுகம்! September 7, 2018
பல ஆண்டுகளாக டிரைவர் இல்லாத கார் குறித்த செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம், வெளிநாடுகளில் அதுபோன்ற கார்களின் சோதனை ஓட்டமும், தயாரிப்பு பணிகளும… Read More
நேரடி கொள்முதல் நிலையங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு! September 8, 2018
தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக த… Read More