சனி, 4 ஏப்ரல், 2020

கடந்த 2 நாட்களில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 647 பேருக்கு கொரோனா!

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 647 பேருக்கு கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  
கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக லாவ் அகர்வால் கூறினார். இந்தியாவில் இதுவரை 2,301 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
photo
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் கடந்த 2 நாட்களில் 647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 14 மாநிலங்களில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தெரிவித்தார். மொத்தம் 157 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்
credit ns7.tv