வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 46,970 பேர் கைது!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 46,970 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி மக்கள் வெளியே நடமாடுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் வீட்டுக்குள்ளேயே  இருக்க வேண்டும் என அரசு எச்சரித்தும், வெளியே சுற்றித் திரிந்த 46,970 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
Police
மேலும் 35,206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 42,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16,27,744 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை 144 தடை உத்தரவை மீறிய 279 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
credit ns7.tv