செவ்வாய், 1 மே, 2018

​காதல் பிரச்சனையால் கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல்! May 1, 2018

Image
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி வாயிலில், இளைஞர் ஒருவரால் மாணவியின் கழுத்தறுக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதல் பிரச்சனைகளால் நடக்கும் கொலை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், காதல் பிரச்சனையால் கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல்..


நவம்பர் 2012-ல் காரைக்கால் பேருந்து நிலையத்தில் வினோதினி மீது  ஒரு தலையாக காதலித்து வந்த  சுரேஷ் ஆசிட் வீசியதில், சிகிச்சை பலனின்றி வினோதினி பலியானார்.

ஜனவரி 2013-ல் சென்னை, ஆதம்பாக்கத்தில் திருமணத்திற்கு மறுத்த வித்யா என்பவர் மீது விஜயபாஸ்கர் ஆசிட் வீசி கொலை செய்தார்.

ஜூன் 2016-ல் சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் என்ற இளைஞனால் சுவாதி என்ற மென் பொறியாளர்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாணவி சோனாலி, கரூர் பொறியியல் கல்லூரி வாசலில் முன்னாள் மாணவரால் கொலை செய்யப்பட்டார்

அதே 2016 செப்டம்பரில், தூத்துக்குடியில் பிரான்சினா என்கின்ற பள்ளி ஆசிரியையை ஒருதலையாகக் காதலித்த கீகன் ஜோஸ் என்பவர் வெட்டிக் கொலை செய்தார்.

இதேபோல், கோவை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தன்யா என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்த ஜாகீர் என்பவர், கத்தியால் குத்தி கொலை செய்தார்.

அக்டோபர் 2016-ல் கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் வைத்து, ஒரு தலைக் காதலை ஏற்க மறுத்த பெண்ணை அரவிந்த் குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். 

மார்ச் 2017-ல் ராமநாதபுரத்தில், தனது காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி தாரணியை குமார் என்பவர் வெட்டி கொலை செய்தார்.

ஜனவரி 2017-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில், தனது காதலை ஏற்க மறுத்த கல்லூரி ஆசிரியை அனுலின்சியை, பிஜு என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பிப்ரவரி 2017-ல் மதுரையில்  காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார்.

ஏப்ரல் 2017-ல் சீர்காழியில், பேஸ்புக்கில் பலருடன் நட்பாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட தகராறில் பொறியியல் கல்லூரி மாணவியை, அவரது காதலர் கொலை செய்தார். 

நவம்பர் 2017-ல் சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இந்துஜா என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் எரித்துக் கொலை செய்தார். 

பிப்ரவரி 2018-ல் மதுரையில் பள்ளி மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். 

மார்ச் 2018 சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி, தனது காதலனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். 

மே 2018-ல் வேலூர் மாவட்டம் காட்பாடியில் திருமணம் செய்ய மறுத்தப்பெண்ணை, அவரது காதலன் கழுத்தை அறுத்து கொள்ள முயற்சித்துள்ளார்.