
கோவை உக்கடம் பகுதியில் ரசாயாண கல் வைத்து பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் உக்கடம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வரும் மாம்பழ குடோன் மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும், சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்டு வந்த 15 குடோன்கள் மற்றும் கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.