ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி தாக்குதல்: பலர் உயிரிழப்பு! September 30, 2018

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தை, அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா, ஆஸ்திரேலியா என 14 நாடுகளில் பெரும் உயிரிழப்புகளையும், சேதத்தையும் ஏற்படுத்திய அந்த சுனாமி தாக்குதலில் இரண்டரை...

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர்! September 30, 2018

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நீதித்துறையை விமர்சித்து கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், கன்னூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில்...

கேரளாவில் மீண்டும் தொடங்கிய பருவ மழை; முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு! September 30, 2018

கேரளாவில் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால், முல்லை பெரியார் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 624 கனஅடியில் இருந்து 3 ஆயிரத்து 583 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம், 125 அடியிலிருந்து 127 அடியாக உயாந்துள்ளது. மழை தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அணை விரைவில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து...

​எதிர்ப்பு வலுத்ததால் சிங்கப்பூரில் பெற்ற மருத்துவ சிகிச்சைக்கான தொகையை அரசிடம் திருப்பியளித்த நிதியமைச்சர்! September 30, 2018

அரசுப் பணத்தில் சிங்கப்பூரில் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையை எதிர்ப்பு காரணமாக மீண்டும் அரசிடமே திருப்பி ஒப்படைத்துள்ளார் அமைச்சர் ஒருவர்.சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அரசின் நிதியமைச்சராக இருப்பவர் யனமலா ராம கிருஷ்னுடு, இவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பினார். இந்த...

விடுதலை செய்

video link: https://www.facebook.com/ananda.selvan.73/videos/288803301724806...

Corrupt

...

சனி, 29 செப்டம்பர், 2018

கைது வாரண்ட் இருந்தும் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல் விட்டது, நிர்வாக சீரழிவுக்கு எடுத்துகாட்டு - நல்லக்கண்ணு September 29, 2018

கைது வாரண்ட் இருந்தும் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல் விட்டது, நிர்வாக சீரழிவுக்கு எடுத்துகாட்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம், பாலின வேறுபாடு களையப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா ஊழல்...

கறிவேப்பிலையின் மகத்துவம்! September 29, 2018

தினமும் நாம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் அதிகமாக சேர்க்கப்படுவது கறிவேப்பிலை. கறிவேப்பிலை உணவில் சேர்த்துக்கொள்வது, சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. காப்பர், கேல்சியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கறிவேப்பிலை, நம் உடல் ஆரோக்கியத்தில் வகிக்கும் பங்கினை எடுத்துறைக்கும் செய்தி...கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும்...

வடகிழக்கு பருவமழை குறித்த முதல் அப்டேட் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம் September 29, 2018

தமிழகத்தில் நடப்பாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாகப் பொழியும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். குமரிக்...

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

​தீபாவளியை முன்னிட்டு 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு! September 28, 2018

தீபாவளியை முன்னிட்டு 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத்...

திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! September 27, 2018

திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 497 சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என 5 நீதிபதிகளும்...

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகார தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்த முக்கிய அம்சங்கள்! September 28, 2018

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்ஆண், பெண் சமமானவர்கள் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மதங்களில் இரட்டை முறை கடைப்பிடிப்பது, பெண்களின் கவுரவத்தை பாதிக்கும் நடவடிக்கை எனத் தெரிவித்தார். மாதவிடாய் போன்ற உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான...

​அலுமினியப் பாத்திரங்கள் உதவியுடன் ஆற்றைக் கடக்கும் பள்ளி மாணவர்கள்! September 28, 2018

அசாம் மாநிலத்தில் அலுமினியப் பாத்திரங்கள் உதவியுடன், குழந்தைகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிஸ்வந்த் மாவட்டத்தில் உள்ள நதுவார் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில், பாலம் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக அலுமினிய பாத்திரங்களில் மிதந்து சென்று ஆபத்தான முறையில்...

வியாழன், 27 செப்டம்பர், 2018

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! September 27, 2018

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நஷிர் அமர்வு இன்று...

10-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் போலீசாரால் கைது -

நியூஸ்7தமிழின் 'பகத்சிங்' ஆவணப்படத்தை காண சென்ற 10-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் போலீசாரால் கைது -  ...

கடும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்! September 27, 2018

ஹிமாச்சலப்பிரதேசம் மணாலியில் வெள்ள பாதித்த பகுதியில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்களை வழங்கினர்.மணாலியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மீட்பு பணியினர் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால், அங்கு, ஹெலிகாப்டர் உதவியுடன், குடிநீர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மீட்பு படையினர் வழங...

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? September 27, 2018

அயோத்தி விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்களை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.  மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில்...

பெண்ணை ஜீப்பின் மேற்கூரையில் கட்டி கொண்டு சென்ற போலீசார்! September 27, 2018

பஞ்சாபில் பெண்ணை ஜீப்பின் மேற்கூரையில் கட்டி போலீசார் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் சாவிந்தா தேவி பகுதியை சேர்ந்த ஒருவரை வழக்கு ஒன்றில் கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், அந்த பெண்ணை, ஜீப்பின் மீது கட்டி வாகனத்தை...

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கொள்ளைபோன 89 சிலைகள் சைதாப்பேட்டையில் மீட்பு! September 27, 2018

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கொள்ளை போன 89 சிலைகள் சென்னை சைதாப்பேட்டையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் கடத்தல் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது...

செங்கோட்டை கலவரத்தில் சாமி மீது கல் எறிந்தவர்கள் கைது:

கடந்த 16 ஆம் தேதி ஜெய மூர்த்தி என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி குமிடுவதற்காக சுமார் 80 நபர்கள் இரண்டு பேருந்துகளில் செங்கோட்டை கோட்டான் குளம் வழியாக செல்ழும் போது சுமார் 5 மணி அளவில் TN 76AE 0042 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள்பேருந்துகள் மீது கல்லெறிந்தார்கள். பேருந்தில் உள்ளவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வந்து கல் எறிந்த இருவரையும் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்த...

எல்லாம் வல்ல அல்லா நமக்கு நல்ல துணையை தந்து அருள்புரிவானாக

#மனைவி; என்னங்க! Fஜர் பாங்கு சொல்லியாச்சு! ம்ம் எழும்புங்க!!! #கனவன்; தூக்கம் வருதுமா! நாளை தொழுகிறேனே! #மனைவி; அஸ்தஃபிருல்லா!!! கனவனை தொழுகைக்கு எழுப்பாத மனைவி நாளை மறுமை நாளில் நிர்வானமாக நிற்கப்படுவாளாம்!!! நாயகம் சொல்லிருக்காங்க! நாம் செய்யும் பாவத்திற்கு முதல் மந்திரமே நீங்கள் சொன்ன இந்த வார்தை தான். ஓதுவு செய்து வாங்க நான் இகாமத் சொல்ரேன்! அட! சொல்ரேன்ல ம்ம்! எழும்புங்க! (தொழுகைக்கு பிறகு.) #மனைவி; எங்க போறிங்க!!! #கனவன்; தூங்க போறேன்!!! #மனைவி;...

பேச்சுரிமை யாரிடமுள்ளது

...

புதன், 26 செப்டம்பர், 2018

கத்தார் நாட்டிற்கு Free visa( விசிட் விசா ) வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!

கத்தார் நாட்டிற்கு Free visa( விசிட் விசா ) வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!! இந்தியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கத்தாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கத்தாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கத்தாரின் அதிகமான நிறுவனங்கள்...

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! September 26, 2018

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செங்கோடு பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு நேற்று மாலை சென்ற ராணி என்ற பெண்ணிடம் ஹெல்மட் அணிந்த மர்ம நபர்கள் 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர். அதே மர்ம நபர்கள், வாலரைகேட் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவரிடம் 8...

​சூறை காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சேதம்! September 26, 2018

களக்காடு அருகே திருக்குறுங்குடியில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.அங்கு நேற்றிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் போது பயங்கர சூறை காற்றும் வீசியது. இதனால் திருக்குறுங்குடி பெரியகுளம் பத்துக்காடு, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.இதுபோல 500 ஏக்கர்...

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு தொடருமா? September 26, 2018

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கபடுகிறது. வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து 27 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பயோமெட்ரிக் தகவல்கள்,...

வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து பிரதமர்! September 26, 2018

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தமது 3 மாத கைக்குழந்தையுடன் பங்கேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை பெற்ற அவர், டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஜூன்...

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! September 25, 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து 2-ஆவது முறையாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலவரையறை ஆகஸ்ட்-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.வருமான வரி கணக்கு தாக்கல்...

ஐந்தே நாள்; எட்டரை லட்சம் கோடி இழப்பு. கதிகலங்கும் முதலீட்டாளர்கள்! September 25, 2018

இந்தியப் பங்குச் சந்தைகளில் ஐந்தே நாளில், முதலீட்டாளர்களுக்கு எட்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், கடந்த வாரம் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இந்நிலையில், இன்று பங்குச்சந்தை...

மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்! September 25, 2018

பாஜக குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி, ஆராய்ச்சி மாணவி சோபியா பயணம் செய்தார். அப்போது, விமானத்தில் பயணித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையை நோக்கி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதுகுறித்த...

பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவு! September 25, 2018

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளருக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகே பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2016ம் ஆண்டு போராட்டம் நடத்திய பியூஷ் மானுஷை போலீசார் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட...

12ம் வகுப்பு மாணவியின் உயிரை ஒரே இரவில் இரு முறை காப்பாற்றிய ஆபத்பாந்தவன்! September 25, 2018

ஒரே இரவில் 12ம் வகுப்பு மாணவியின் உயிரை இரு முறை ஒருவர் காப்பாற்றியிருக்கும் வினோத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த சையது நாசர் ஹூசைன் (43வயது) என்பவர் பிளம்பிங் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் கடையை அடைத்துவிட்டு இரவில் வஷி பாலத்தின் வழியாக வீட்டுக்கு திரும்புவார். வஷி பாலம் என்பது மும்பையையும், நவி மும்பை பகுதியையும்...

திங்கள், 24 செப்டம்பர், 2018

நந்தினியின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பாஜகவினர்! September 23, 2018

மானாமதுரையில் சமூக ஆர்வலர் நந்தினியின் தந்தை மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்ற அவர்களை மானாமதுரை அருகே பாஜகவினர் வழிமறித்து வாக்குவாதத்தில்...

திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக எம்.பி.க்கள், மத்திய அரசின் ஏவலர்களாக செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார்.தமிழகத்திற்கு நல்ல அரசு அமைய வேண்டும் அதற்கு ஆட்சி மாற்றம்...

திருச்சியில் தந்தை பெரியார் சிலையின் கைத்தடி உடைப்பு! September 24, 2018

திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது.இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம்...

ஹிமாச்சலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும்; நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! September 24, 2018

கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழைக்கு அங்குள்ள 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா தலங்களான குலு, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஆறுகளில்...

2009ல் இருந்த புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய நேபாளம்! September 24, 2018

உலகிலேயே புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய முதல் நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் விரைவில் அடைய உள்ளது.கடந்த 2010 நவம்பரில் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் புலிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக, புலிகள் வாழ்விட நாடுகளான ரஷ்யா, நேபாளம், இந்தியா, வங்காளதேசம், சீனா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச புலி பாதுகாப்பு கூட்டம்  நடைபெற்றது.அப்போதைய...