திங்கள், 15 அக்டோபர், 2018

கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடல்! October 15, 2018

Image

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 4 கட்டங்களாக நடைபெற்ற ஆய்வுக்காக 34 குழிகள் அமைக்கப்பட்டன. இதில் தங்க ஆபரணங்கள், பிராமி எழுத்துக்கள், கட்டட பகுதிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.

4ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்ற நிலையில், அதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.