Home »
» டெங்குக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 83 பேர் உயிரிழப்பு! October 21, 2018
டெங்குக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 83 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2017ம் ஆண்டு ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 325 பேர் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் செப்டம்பர் வரை 40 ஆயிரத்து 868 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 83 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் மூவாயிரத்து 660 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நான்காயிரத்து 667 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும், அதில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெங்குக் காய்ச்சலுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,983 பேருக்கு பாதிப்பு ஏற்ட்டதாகவும், 10 பேர் உயிரிழந்தனர் என்றும், டெல்லியில் ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts:
திருச்சியில் காவிரிக்காக போராடிய 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது! April 12, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, பேருந… Read More
நடிகர் சிம்புவின் கருத்துக்கு கர்நாடகாவில் பெருகும் ஆதரவு! April 12, 2018
நடிகர் சிம்புவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து, கர்நாடக மக்கள் தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர். தண்ணீர் வழங்கும் கர்நாடக மக்களுக்கு நட… Read More
தமிழகமே கருப்பாக மாற வேண்டும் - ஸ்டாலின் April 12, 2018
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு உடை அணிவதுடன், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டா… Read More
மோடியின் தமிழக வருகையை கண்டித்து, பலூன்களை பறக்கவிட்டு வைகோ போராட்டம்! April 12, 2018
பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து சென்னை சின்னமலையில் தடையை மீறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பலுான்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுப… Read More
புகார் கூறிய பயணியை, விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட விமான ஊழியர்கள்! April 11, 2018
விமானத்தில் கொசுத்தொல்லை இருந்ததாக புகார் கூறிய பயணியை, விமான ஊழியர்கள் அதில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 8… Read More