செவ்வாய், 9 அக்டோபர், 2018

அரசுப்பேருந்தில் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகள்! October 9, 2018

Image

கடலூரில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்திருந்ததால் மழையில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயணிகள் குடை பிடித்தபடி பயணம் செய்தனர். 

கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்து குறிஞ்சிப்பாடி வழியாக மேல்மருவத்தூர் சென்றுக்கொண்டிருந்த போது மழை பெய்ததால் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். 

கட்டணம் செலுத்தியும் இதுபோல் அவல நிலையில் பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். அரசுப்பேருந்து முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது போன்ற புகார்கள் குவிந்தவண்ணம் இருப்பது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.