செவ்வாய், 23 அக்டோபர், 2018

எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதி! October 23, 2018

Image

சென்னை எண்ணூரில் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எண்ணூர் சத்தியவாணி முத்துநகரை சேர்ந்த சாதிக் பாஷா என்பவரின் 2 வயது குழந்தை சபீக், காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து, கடந்த 5 நாட்களாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை சஃபீக் உயிரிழந்தான். எண்ணூரில் நிலவும் சுகாதார சீர்கேடே, குழந்தையின் மரணத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 31 குழந்தைகள் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.