Home »
» பிரதமர் மோடி நாட்டை துண்டாக்க நினைக்கிறார் : ராகுல்காந்தி! October 21, 2018
பிரதமர் மோடி நாட்டை துண்டாக்க நினைப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் சிறுபான்மையின மக்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கூறினார்.பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே, அச்சப்படும் சூழல் உள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற அவல நிலை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, ஒரு நல்ல அரசு மக்களுக்காக பாடுப்பட வேண்டும்; ஆனால் தற்போதைய சூழல் அவ்வாறு இல்லை எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
source: http://ns7.tv/ta/tamil-news/india/21/10/2018/modi-wants-ruin-country-rahul-gandhi
Related Posts:
நீட் கலந்தாய்வு முறைகேடு: தந்தை, மகள் இருவரும் கேரளாவில் தலைமறைவு நீட்தேர்வு கலந்தாய்வில் மோசடி செய்த மாணவி, தந்தை இருவரும் கேரளாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக வழக்கை விசாரித்துவரும் பெரியமேடு காவல் அதிகாரிகள் தெ… Read More
தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்; அறிவியல் உலகம் வியந்திடும் வகையில் தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்; அவற்றை 2021-ல் #NASA விண்… Read More
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கை அரசு அந்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக, மஞ்சளை இறக்குமதி செய்ய தடைவிதித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 20 ஆயிரம் கிலோ மஞ்சளை இலங்கை போலீசார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். பொதுவாக இந்தியாவில் இருந்து அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதும் அவை பறிமுதல் செய்யப்பட்டதையும் செய்தியாக படித்திருப்போம். ஆனால், இப்போது உணவுப் பொருளான மஞ்சள் கடத்தப்பட்டு அதனை இலங்கை போலீசார் பறிமுதல் செய்துள்ளது நடந்துள்ளது. இந்தியாவில் இருந்து இல்ங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதும் இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதும் அவை இலங்கை போலீசாரிடம் சிக்கி பறிமுதல் செய்யப்படுவதும் நடந்து வருகிறது. அப்படி, பறிமுதல் செய்யப்படும் மஞ்சளை இலங்கை அரசு அழித்தும் வருகிறது. இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது ஏன் என்பதையும் அதற்கு காரணம் என்ன என்றும் பார்ப்போம். கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்த ஆண்டு இலங்கை அரசு அந்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக, வெளிநாடுகளில் இருந்து மஞ்சளை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இதனால், அந்நாட்டில் மஞ்சள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 20,000 கிலோ (20 டன்) மஞ்சளை இலங்கை போலீசார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். “சரக்குகள் ஏற்றப்பட்ட ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை பிடித்துள்ளோம். இது இந்தியாவிலிருந்து வந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இது இலங்கைக்கு தெற்கு கடற்கரையோரப் பிடிக்கப்பட்டுள்ளது” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையைத் தாக்கிய கொரோனா வைரஸ் தொற்று அதன் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதனால், இலங்கை அரசு இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்தது. இலங்கை ஆண்டுதோறும் 7,000 டன் மஞ்சளைப் பயன்படுத்துகிறது. கொரோனா வைரஸ் அந்நாட்டில் பரவும் வரை இலங்கை கிட்டத்தட்ட 5,000 டன் மஞ்சளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தது. இதனால், ஏற்பட்ட மஞ்சள் பற்றாக்குறையால், இலங்கையின் தலைநகர் மற்றும் பிற மாகாணங்களில் நுகர்வோர் நியாயமான விலையில் மஞ்சளை வாங்குவது கடினமாக உள்ளது. இலங்கை அரசு அந்நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கு அதிகபட்சமாக இலங்கை ரூபாய் மதிப்பில் 750 (ரூ.291) என்று நிர்ணயித்திருந்தாலும், கருப்பு சந்தையில் ஒரு கிலோ மஞ்சள் தூள் இலங்கை ரூபாய் மதிப்பில் 5,000-க்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 1,940) விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை வேளாண் துறை அதிகாரிகள் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அது இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் உள்ளூர் தேவையை எவ்வளவு பூர்த்தி செய்ய முடியும் என்பது தெரியவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில், கொழும்பை தளமாகக் கொண்ட வணிகர்கள் தொற்றுநோய்க்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 10 லட்சம் கிலோ மஞ்சளை விடுவிக்கக் கோரினர். அதன் மூலம், உள்ளூர் சந்தையில் அழுத்தத்தைக் குறைக்க முயன்றனர். உள்ளூர் மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் இந்த சரக்கு விற்பனைக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதும் அவை போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதும் நடந்து வருகிறது. இதற்கு காரணம், இலங்கையில், ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறை மற்றும் அதற்கு இலங்கையில் கிடைக்கும் அதிக விலையும் முக்கிய காரணமாக உள்ளது. UK Mutant Coronavirus Tamil News : ஓர் புதிய வைரஸ் தோன்றியதற்காக 2020-ம் ஆண்டு எப்போதும் நினைவுகூரப்படும். அதுதான் SARS கொரோனா வைரஸ் 2 (SAR… Read More
ஐ.டி.ஆர் தாக்கல் செய்தால் மட்டும் போதாது : அபராதத்தை தவிர்க்க இதனை செய்ய வேண்டும் இந்தியாவில் வருமான வரி செலுத்த கடைசி தேதி டிசம்பர் 31 வரை என வரையெறுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட காலத்திற்… Read More
பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு புதிய வைரஸ் பாதிப்பு : தமிழக அரசு 20/12/2020 பிரிட்டனிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ஒருவருக்கு உருமாறிய புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை முதன்மை செய… Read More