திங்கள், 22 அக்டோபர், 2018

அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை உயர்வு! October 22, 2018

அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துவருவதாக உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. 

1990-ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர்கள் அதிகளவில் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அதிகமாக பணியில் அமர்த்தப்பட்டனர். ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு பலமடங்கு அதிகரித்தது. இது போன்ற பல்வேறு காரணிகளால் 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் வரை உயர்ந்தது. 

அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்திலும் அடுத்தபடியாக உருது மற்றும் குஜராத்தியும், 4-ஆவது மொழியாக தெலுங்கும் உள்ளது. கடந்த ஆண்டு கணக்கின்படி 4 லட்சம் தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் கூறியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்ட ஆந்திராவை சேர்ந்த பலர் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்பொறுப்புகளில் பதவி வகித்து வருவது குறிப்பிடதக்கது.

Related Posts: