ஞாயிறு, 14 அக்டோபர், 2018

​பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா! October 14, 2018

Image

பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எம்.ஜே.அக்பர் மீது Me Too இயக்கம் வாயிலாக பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அரசு முறைப் பயணமாக நைஜீரியா சென்றிருந்த எம்.ஜே.அக்பர் இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்துகொண்ட நிலையில், புகார் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியாகும் எனக் கூறிச் சென்றார். 

இந்த நிலையில், எம்.ஜே.அக்பர் ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.