திங்கள், 15 அக்டோபர், 2018

பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடிக்க அனைவரும் தயாராக வேண்டும் : திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் October 15, 2018


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடித்து இந்தியாவை மீட்டெடுக்க அணைத்து தரப்பினரும் தயாராக வேண்டும் என திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருப்பூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், மத்தியில் உள்ள பாஜக அரசு, கடந்த தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றார். கடந்த நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிட்ட மாணிக் சர்க்கார், பாஜக அரசின் ஜி,எஸ்.டி , பணமதிப்பிழப்பு போண்ற தவறான பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக கூறினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து தரப்பினரும் தயாராக வேண்டும் எனவும் மாணிக் சர்க்கார் கேட்டுக் கொண்டார்.  இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Image

source: news7 tv
http://ns7.tv/ta/tamil-news/india/15/10/2018/should-prepare-defeat-bjp-parliament-elections-says-tripura-former-cm