செவ்வாய், 30 அக்டோபர், 2018

உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த நீங்கள் யார்? - அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி October 29, 2018

Image

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த தாங்கள் யார் என பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரள மாநிலம் கன்னூரில் பாஜக அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசிய அமித்ஷா, சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைக்கும், கேரள அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அமித்ஷாவின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், அமித்ஷாவின் பேச்சு அரசியல்  சாசனத்திற்கு எதிராக உள்ளதாக கூறியுள்ளார். 

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கை விசாரித்துவரும் நிலையில் தங்கள் விருப்பப்படி தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூற முடியுமா என்றும் அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவிற்கு கேரளாவில் என்றும் இடமில்லை என்றும் பினராயி விஜயன் காட்டமாக தெரிவித்துள்ளார்.