புதன், 24 அக்டோபர், 2018

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த கோரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்! October 24, 2018

Image

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு துணி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

விவசாய தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூர் சாலை வழியாக ஏராளமான விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி பேரணியாக சென்று, அண்ணா சிலை அருகே  முழக்கங்களை எழுப்பினர்.

Related Posts:

  • சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம் “தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று… Read More
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011- ஆம் ஆண்டில் மத ரீதியிலான எடுக்கப்பட்ட‪#‎மக்கள்_தொகை_கணக்கெடுப்பு‬ 2015-இல் இந்துமதவாத ‪#‎பாஜக‬ என்கிற‪#‎மத்திய_அரசு‬ வெள… Read More
  • டூப்ளீகேட்ல வருமோ! இன்னும் எண்ணலாம் இப்படிடூப்ளீகேட்ல வருமோ! சீனர்களின் அடுத்த டூப்ளீகேட் ( போலி_ கோழி _ முட்டை)விழிப்புணர்வு கொடுக்க உதவுங்கள்… Read More
  • எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 எச்சரிக்கை எச்சரிக்கை...! +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள… Read More
  • பீ கேர்புல் மக்க..... எதை மறைக்க இந்த போலியான கணக்கெடுப்பு.. யாரை ஏமாற்ற... 10 ஆண்டுகளுக்கு ஒர் முறையே மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்..... 2010 ல் எடுத்து … Read More