புதன், 26 டிசம்பர், 2018

சோலார் தகடுகள் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த விசாகப்பட்டினம் மாநகராட்சி! December 26, 2018

source ns7tv

Image
நாட்டிலேயே முதல்முறையாக நீரில் மிதக்கக்கூடிய சோலார் தகடுகளை அமைத்து, விசாகப்பட்டினம் மாநகராட்சி 2 மெகாவாட் மின்சாரத்த்தை உற்பத்தி செய்துள்ளது. 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள ஏரியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 
இதனால் ஆயிரத்து 540 டன் நிலக்கரி எரிப்பது தடுக்கப்படுவதுடன், மூன்றாயிரத்து 80 டன் கார்பன்டை ஆக்சைடு வெளியிடப்படுவதில் இருந்து மக்கள் பாதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.