செவ்வாய், 25 டிசம்பர், 2018

புகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.80,000 கோடி செலவு! December 25, 2018

நாடு முழுவதும் பீடி புகைப்பழக்கத்தால் எவ்வளவு செலவாகிறது? புகைபிடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா?
பீடி, புகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு  80,000 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்படுகிறது. தேசிய புகையிலை தடுப்பு மையம் (NTCP) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பொது கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ரிஜோ.எம்.ஜான் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது. பீடி புகைப்பவர்களின் மருத்துவத்திற்கான செலவு எவ்வளவு என்பதை இப்போது பார்க்கலாம்.
மருத்துவ செலவினங்களுக்காக ஒரு ஆண்டுக்கு 16,870 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். இதில், இரண்டு வகையான செலவினங்கள் அடங்கும். நேரடி செலவினங்களாக மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவ கட்டணம் மற்றும் மருத்துவமனையில் தங்கும் செலவுகள், போக்குவரத்து செலவுகள் கருதப்படுகின்றன. மொத்த செலவுத் தொகையா 16,870 கோடி ரூபாயில், இது 20.9 சதவீதம் நேரடி செலவாகும். 
அடுத்து, மறைமுக செலவுகளை பார்ப்போம். குடும்ப நபரின் வருவாய் இழப்பு, நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் உறவினர்களுக்கான தங்கும், உணவு செலவினங்கள் மறைமுக செலவாக பார்க்கப்படுகிறது. மொத்த செலவான 16,870 கோடி ரூபாயில் இது 79 சதவீதம் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% பீடி புகைப் பழக்கத்திற்காக செலவிடப்படுகிறது. மொத்த செலவினத்தில் இருந்து அரை சதவிகிதம் மட்டுமே வரி வருவாயாக அரசுக்கு கிடைக்கிறது. 
மொத்த மருத்துவ செலவினங்களில் 2.24% பீடி பழக்கத்திற்காகவே செலவிடப்படுகிறது. மொத்த புகையிலை பயன்பாட்டில் 81% பீடியாகவே இருக்கிறது. இந்தியாவில் சராசரியாக 15 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 20 லட்சம் பேர் பீடி புகைக்கிறார்கள்.
source: ns7.tv