செவ்வாய், 25 டிசம்பர், 2018

வாஸ்கோடகாமா

Image

source ns7.tv

வாஸ்கோடகாமா நினைவு தினம் இன்று!
வரலாற்றின் பெரும் பகுதி ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகத்தான் இந்தியா இயங்கிவந்தது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு போக்குவரத்தே, அனைத்து  அரசாங்கமும் போக்குவரத்திற்கு அதிகம் செலவிடுவது கூட நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான்,அதே நேரம் வழித்தடங்களும்,நேரம்,செலவு என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது அவ்வகையில் கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரையிலான ஐந்நூறு ஆண்டுகளில், இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையே இருந்த வர்த்தக உறவுகள் வலுவானதாய் இருக்க வாஸ்கோடகாமா வழித்தடம் முக்கிய பங்குவகிக்கிறது.தற்போதைய  நம்முடைய கலாச்சாரம் கூட பாதி ஐரோப்பிய கலாச்சாரம் கலந்து தான் காணப்படுகிறது.
 
5 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும், மேலை நாடுகளிற்குமிடையே வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்தன.எகிப்தின் வழியாக ஐரோப்பாவை அடையும் மார்க்கம், ஆக்ஸஸ் காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும் வடக்கு வழி மார்க்கம்,சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலம் ஐரோப்பாவை அடையும் இடைப்பட்ட மார்க்கம்.
இவைகள் அனைத்தும் துருக்கிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.எனவே எந்த ஒரு பரிமாற்றமும் வர்த்தகமும் அவர்கள் தலையீடு இல்லாமல் இருக்காது.இன்னொரு முக்கிய காரணம் ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையேயிருந்த பகைமை முக்கிய பிரச்னையாக இருந்தது. அவர்கள் விதிக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வணிகம் செய்ய வேண்டும்.
இந்த காரணங்களால், ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமிடையேயான புதிய மற்றும் நேரடி கடல் வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர்கள் ஸ்பானியரும், போர்த்துக்கீசியருமே. ஆனால் இதில் முதலில் வெற்றி கண்டவர்கள் போர்த்துக்கீசியர்களே. அப்போதைய இளவரசர் ஹென்றி இதற்குத் தேவையான முழு உதவியையும், ஆதரவையும் வழங்கினார்.இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் காலூன்றி, பின்னர் 1471ல் பூமத்திய ரேகையைக் கடந்தனர். 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் 1498 ல் இந்தியாவை வந்தடைந்தனர்.
1483 இல், 'டீகோ காவோ' என்ற கப்பல் போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. அனுமான்யமாக  ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில். பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ டகாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின் நம்பிக்கை முனை நான்காவது இடமாக கென்யா வந்ததடைந்து பின்  1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. வருடம்  காலகட்டத்தை கவனத்தில் கொள்ளும்போது மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்புதான் இது. எந்த நேரத்திலும் வழி தவறி மேற்கே போய்விடக்கூடிய அபாயம்; இதன் நடுவில் மாதக் கணக்காக வேற்று முகத்தையே பார்க்காமல், போகும் முடிவும் தெரியாமல் சில மாலுமிகளும், சில கப்பல் பணியாளர்களும் திரும்பத் தன் நாட்டுக்கே போய்விட வேண்டும் என்று கலகம் செய்தது; ஆங்காங்கே கரையில் இறங்கிய இடத்தில் அபாயம், உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை, புயல் சீற்றத்தின் பயமுறுத்தல் என்று எண்ணிலடங்காத சோதனையைக் கடந்து கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததே சாதனைதான்.
வாஸ்கோடகாமாவின் இந்தியப் பயணத்தின் விளைவாக,ஐரோப்பா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கிடையேயான ஒரு நேரடி கடல்வழித் தடம் அமைந்தது.இதன் காரணமாக,எண்ணற்ற நாடுகள் பெரும் பயனடைந்தன.இதுவே வாஸ்கோடகாமா கடல்வழிப் பயணத்தின் அடிப்படை முக்கியத்துவமாக இருந்தது.இந்தப் பயணத்தால் போர்ச்சுக்கல் நாட்டிற்கு குறுகிய காலத்தில் அதிகம் பயன் கிடைத்தது.
ஐரோப்பியர்களின் சமூகத்தாலும் மதத்தாலும் வியாபாரத்தாலும் அல்லது தொழிற்நுட்பத்தாலும் பாதிக்கப்படாத மக்கள் யாருமே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் கிழக்கத்திய கொள்கைகள் இப்படிப்பட்ட ஊற்றுமூலங்கள் வழியாக ஐரோப்பாவிற்கு வந்து ஓரளவு ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தன. காலப்போக்கில் இந்த கருத்துப் பரிமாற்றங்கள், பல்வேறு மனித கலாச்சாரங்களுக்கு எல்லையே இல்லை என்ற விழிப்புணர்வை அதிகரித்தன.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் குடியரசின் கீழ் அடிமைப்பட்டது.வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்தின் விளைவுகள் உண்மையில் நல்லதோ கெட்டதோ, ஆனால் இந்த நவீன உலகம் அவருடைய கடற்பயணத்தின் பலன்களை இன்னும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறது.
மூன்றாம் முறை இந்தியா வந்த  வாஸ்கோடகாமா  1524 டிசம்பர் 25-ல்  கொச்சியில் மறைந்தார்.‘உருமி’ படத்தின் மூலம் மிக அழுத்தமாக இயக்குனர் சந்தோஷ் சிவன் பதிவு செய்திருந்தார்.