வெள்ளி, 21 டிசம்பர், 2018

இனி முன் அறிவிப்பின்றி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு December 21, 2018

Image

source; ns7.tv
அரசு பள்ளி ஆசிரியர்கள் முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையான முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையும் மீறினால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.