வியாழன், 20 டிசம்பர், 2018

மேகதாது விவகாரம் : அதிமுக எம்.பிக்கள் 7வது நாளாக போராட்டம்! December 20, 2018

Image

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி குடிநீர் மற்றும் மின் உற்பத்தியை தேவையை பூர்த்தி செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், கையில் பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
source: ns7.tv