திங்கள், 17 டிசம்பர், 2018

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள் December 17, 2018



source: ns7.tv
Image

ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்கும் முறையை தடை செய்ய கோரி தமிழக முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தக் கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள், விதிகளை வகுத்து அரசிதழில் வெளியிட்ட பின்னர், அடுத்த இரண்டு மாதங்களில் மத்திய அரசுக்கு விண்ணப்பித்து உரிமம் பெறலாம் எனவும் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.