புதன், 12 டிசம்பர், 2018

காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளித்துள்ளனர் : ராகுல்காந்தி! December 12, 2018

Image

காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளித்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களை பெருமை மிகுந்ததாக மாற்றுவோம் என கூறினார்.

இதையடுத்து, தெலங்கானா, மிசோரமில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என ராகுல் காந்தி கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்ட ராகுல் காந்தி, கடினமான சூழலில் காங்கிரஸ் தொண்டர்கள் கொள்கைகளுக்காக போராடி வெற்றி பெற்றுள்ளனர் என மகிழ்வுடன் தெரிவித்தார்.

மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என்றும், ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது உள்ள மத்திய அரசிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என கூறிய அவர், நாட்டை நல்வழியில் எடுத்து செல்லும் நோக்கத்துடன் போராடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
source: ns7.tv