வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஜிஎஸ்டி விவகாரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமர் மோடியை காங்கிரஸ் எழுப்பி விட்டது: ராகுல் காந்தி December 21, 2018

source ns7.tv

Image

ஜிஎஸ்டியின் 18 சதவீத வரி விதிப்பின் கீழ். 99 சதவீத பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேலி செய்துள்ளார்.
இதுகுறித்து, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி எழுப்பி விட்டதாக கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி அளவுகள் குறைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கூறியதை, கண்மூடித்தனமான சிந்தனை என மோடி கூறியதையும், தற்போது அதனை செயல்படுத்த முன்வந்துள்ளதையும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். 
The Congress Party has finally jolted Narendra Ji from his deep slumber on Gabbar Singh Tax.

Though still drowsy, he now wants to implement what he had earlier called the Congress Party’s, “Grand Stupid Thought”.

Better late then never Narendra Ji!
11.1K people are talking about this

ஜிஎஸ்டி வரி வரம்பை மாற்றவே முடியாது என பிடிவாதமாக இருந்த மோடி அரசு, தற்போது அதனை எளிமைப்படுத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். 
source ns7.tv