ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்! December 30, 2018

Image

source: ns7.tv
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட படகுகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு 6 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குல் நடத்தியதாக, மீனவர்கள் புகார் தெரிவத்தனர். 
100-க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதபடுத்தியதால், படகு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு நேரிட்டுள்ளதாகவும், மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.  இரு நாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்க, இந்திய - இலங்கை மீனவர்களிடயே 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், எனவும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.