ஞாயிறு, 30 டிசம்பர், 2018

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர்களா நீங்கள்?...உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! December 30, 2018

Image

source ns7.tv
சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர், திங்கள்கிழமைக்குள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும், என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வார்டு அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகம், தொழிற்கூடங்கள், உணவு விடுதிகளில் இருப்பு வைத்துள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வார்டு அலுவலகங்களில் திங்கள்கிழமைக்குள் ஒப்படைக்குமாறு, சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 
ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பின்னர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, அவற்றை பறிமுதல் செய்ய மண்டல அளவிலும், கோட்ட அளவிலும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.