வியாழன், 27 டிசம்பர், 2018

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்! December 27, 2018

Image

source; ns7.tv

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
ரத்தம் கொடுக்கக்கூடிய கொடையாளியின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும். ரத்தம் தானம் கொடுப்பவர், குறைந்தது ஆறு மாதம் இடைவெளிக்கு பின் தான், அடுத்த ரத்த தானம் வழங்க வேண்டும்.  ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும். குறிப்பாக ரத்த தானம் கொடுப்பவருக்கு, தொற்று நோய் அல்லது தொற்றா நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 
ஹெச்.ஐ.வி, காச நோய், கல்லீரல் தொடர்பான ஹெப்படைடிஸ் நோய்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இதில் ஏதாவது தடங்கலோ அல்லது சிக்கலோ இருந்தால், அந்த குறிப்பிட்ட ரத்த மாதிரிகள் நிராகரிக்கப்பட வேண்டும். பரிசோதனையில் தேர்வான ரத்த மாதிரிகளை குளிர்பதன கிடங்கில் சேமித்து வைக்க வேண்டும். ரத்தம் பெறுபவரின் ரத்த மாதிரியையும்,  கொடுக்கப்படும் ரத்த மாதிரியையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே, ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.