புதன், 19 டிசம்பர், 2018

யானைகள் வராமல் தடுக்க விவசாயிகளுக்கு நூதன ஆலோசனை வழங்கிய வனத்துறையினர்!! December 18, 2018

Image

source: ns7.tv
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாமல் தடுக்க, விவசாயிகளுக்கு வனத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரடப்படும் வாழை மரங்கள், மக்காசோளப்பயிர்களை வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதை தடுக்க, யானைகளுக்கு பிடிக்காத செண்டு மல்லி, புகையிலை, அவரை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட வனத்துறையினர் ஆலோசனை வழங்கினர். இதன் மூலம் வனவிலங்குகள் வராமல் தடுக்கமுடியும் என்பதில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், உப தொழிலான தேனீ வளர்ப்பையும் மேற்கொள்ள அப்பகுதி விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Related Posts:

  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது … Read More
  • மகிமை மிக்க நுங்கு! ‪#‎நுங்கு‬ கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. … Read More
  • காசு இல்லாத மக்களின் கவனதிற்கு ......... உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் கத்தி படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்க… Read More
  • மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி..! -தாரகா- "மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிளமாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்காயாமலக முண்ண… Read More
  • சிகரெட் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்:- 1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது. 2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000… Read More