செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை: தமிழக அரசு December 18, 2018

Image

source  ns7..tv
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலை செயல்பட அனுமதி அளித்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி, தமிழக அரசு இந்த வாரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.