புதன், 12 டிசம்பர், 2018

இது எங்களுக்கான நேரம் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி! December 12, 2018


source: ns7.tv
Image

புதுச்சேரி ஐந்து மாநில தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசியல் என்பது கால்பந்தாட்டம் போல என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆடவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வருகை புரிந்த போது காங்கிரஸ் சார்பில் ஒரே முதலமைச்சராக  நாராயணசாமி இருப்பார் என தெரிவித்திருந்தார்.

அரசியலை தாண்டி நட்புடன் அவருடன் பழகுவதால் அவரிடம் நான் அப்பொழுது உங்களுக்கான நேரம் இது எங்களுக்கான நேரம் வரும் போது நான் பேசுவேன் என்றேன். அதே போல்  நடைபெற்ற 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும் அரசியல் என்பது கால்பந்தாட்டம் போல வெற்றி என்பது மாறி மாறி வரும் என கூறினார்.

அதனை தொடர்ந்து  முதலமைச்சர் நாராயணசாமி  ஆடவர் கால்பந்தாட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.