செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நமது அம்மா நாளிதழ் எச்சரிக்கை! December 18, 2018

source: ns7.tv
Image
நான்கு ஆண்டு காலம் பாஜக ஆட்சிக்கு பல்லக்கு தூக்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிமுக அரசின் மீது காழ்ப்புணர்ச்சி விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என நமது அம்மா நாளிதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய பாஜக அரசையும், தமிழக அதிமுக அரசையும் கடுமையான விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாஜக அரசோடு அதிமுக அரசு கொண்டிருக்கும் நல்லுறவை அடிமைத்தனம் என்று விமர்சித்த சந்திரபாபு நாயுடு, பாஜக ஆட்சியுடன் நான்கு ஆண்டுகள் கூட்டு வைத்திருந்ததால் அவரை சந்தர்ப்பவாத நாயுடு என்று விமர்சனம் செய்துள்ளது. 
எனவே அதிமுக அரசின் மீது காழ்புணர்ச்சி விமர்சனத்தை ஆந்திர முதல்வர் தவிர்க்க வேண்டும் எனவும் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி குடும்பம் மகிழ எதையாவது சொல்லி வாழ்த்துவதற்கு பதிலாக பண்பாடின்றி பக்கத்து மாநில அரசை விமர்சிப்பது அழகல்ல எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது