திங்கள், 31 டிசம்பர், 2018

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! December 31, 2018

source ns7.tv
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கண்டித்து, 8 மாவட்டங்களில், கடந்த 17ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வரும் 3-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று, சட்டப்பேரவையை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த காத்திருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை, விவசாயிகள் தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த தயார், என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பள்ளிபாளையத்தில் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தொடங்கப்பட்ட உயர்மின் கோபுர திட்ட பணிகள், ஆந்திர மாநிலம் வரை முடிவடைந்துள்ளது என்றும், தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள், விவசாயிகளிடம் தவறான தகவல்களை கூறி, இத்திட்டத்துக்கு தடையாக உள்ளதாக தங்கமணி கூறினார். 

Related Posts:

  • உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை. بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِقُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا ا… Read More
  • கடவுளுக்கு ஆயுதம் தேவையா?  - இந்து கிறித்தவ அன்பர்கள் கவனத்திற்கு....  ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் தனக்கு பாதுக்காப்பு அளிக்க இசட் பிரிவு பாதுகாப்பு தேவை… Read More
  • நிய்யத் நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.… Read More
  • மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்  டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற… Read More
  • Quran பெண்களை இழி பிறவிகளாகவும் பெண்களை போகப் பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்க வும் செய்த கொடுமை நடந்தபோது ப… Read More