சனி, 29 டிசம்பர், 2018

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! December 28, 2018

Image

source ns7.tv
10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 வல்லரசு நாடுகள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அந்தப்பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 2022ம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. மிகவும் சவாலான இந்த பணியினை 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதன்படி இரண்டு ஆளிள்ளாத மற்றும் ஒரு ஆட்களை ஏற்றிச்செல்லும் ராக்கெட்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில், 2022ம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் மகன் அல்லது மகள் கைகளில் மூவர்ணக்கொடியை ஏந்தியவாறு  விண்வெளிக்கு செல்வர் என்றார்.
GSLV-Mk III விண்கலம் மூலம் இந்தியாவிலிருந்து 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுவர், இவர்கள் 7 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தத்திட்டத்திற்கு Gaganyaan எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றிபெறும்பட்சத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடாக இந்தியா விளங்கும்.